வெள்ளோடு நத்தை
அப்பத்தா நாச்சம்மா தன் மகன் நாச்சிமுத்துக் கவுண்டனிடம் ஒரு புதிர்க் கேள்வி கேட்டாள்.
" வெள்ளோடு புல்லு மேயும். அது என்னடா மகனே? "
மகன் நாச்சிமுத்து கவுண்டர் பதில் சொன்னான்.
" மான் போல கொம்பு இருக்கும் அதுதானே அம்மா"
ஆக, இந்த கேள்வியும் பதிலும் எதைக் குறிக்கின்றன?
வெண்மையான ஒட்டை உடையதும் மான் போன்ற கொம்பையும் கொண்ட நத்தை 🐌.
எப்போதாவது நீங்கள் நத்தையை பார்த்து" யானைக் கொம்பைநீட்டு! மானுக் கொம்பை நீட்டு என்று பாடி இருக்கிறீர்களா? "
இனி பாடுங்கள்.
Comments
Post a Comment